ஆணிற்கு வேண்டிய மனம்!
களம் புக காத்திருக்கும் தோள்!
கயவர்களை வீழ்த்த இருக்கும் தோள்!
ஒரு போதும் பாரத்தினால் ஓயாத தோள்!
இடுக்கன் தாங்கி நிற்கும் தோள்!
சினம் கொண்டவன் சீரி வந்திடினும்,
பகை கொண்டவன் கடலாய் வந்திடினும்,
தகர்க்க முடியாத பாறை இவன்!
அடக்க முடியாத காளை இவன்!
எதிர்க்க முடியா வீரன் இவன்!
எவன் அவன் தன்னை அறிந்தவன்!
உனது சக்தி நீ அறிந்திருந்தால்!
அது பல்கி பெருக பயின்றிருந்தால்!
எதிரில் பார் வரின் அஞ்ச வேண்டாம்!
உனது பலம் நீ அறிந்திருந்தால்!
எதிரில் புயலே வரினும் அச்சம் வேண்டாம்!
நிலம் தன்னில் கால் ஊன்றி நில்!
மனம் தன்னில் நம்பிக்கையுடன் நில்!
களம் தன்னில் உயரிய யுக்தியுடன் நில்!
முடிவினில் வெற்றியுடன் நில்!
-செல்வா
களம் புக காத்திருக்கும் தோள்!
கயவர்களை வீழ்த்த இருக்கும் தோள்!
ஒரு போதும் பாரத்தினால் ஓயாத தோள்!
இடுக்கன் தாங்கி நிற்கும் தோள்!
சினம் கொண்டவன் சீரி வந்திடினும்,
பகை கொண்டவன் கடலாய் வந்திடினும்,
தகர்க்க முடியாத பாறை இவன்!
அடக்க முடியாத காளை இவன்!
எதிர்க்க முடியா வீரன் இவன்!
எவன் அவன் தன்னை அறிந்தவன்!
உனது சக்தி நீ அறிந்திருந்தால்!
அது பல்கி பெருக பயின்றிருந்தால்!
எதிரில் பார் வரின் அஞ்ச வேண்டாம்!
உனது பலம் நீ அறிந்திருந்தால்!
எதிரில் புயலே வரினும் அச்சம் வேண்டாம்!
நிலம் தன்னில் கால் ஊன்றி நில்!
மனம் தன்னில் நம்பிக்கையுடன் நில்!
களம் தன்னில் உயரிய யுக்தியுடன் நில்!
முடிவினில் வெற்றியுடன் நில்!
-செல்வா











