செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Wednesday, 31 January 2018

வாழ்க்கையே அனுபவம்!!!

விழுவதும் எழுவதும் வாழ்வின் பரிணாமமே,
பகல் முடிந்து இரவைப் போல...

கடிவதும் கட்டி அணைப்பதும் அன்பின் குணமே,
நல்மனிதனாய் உலகத்தில் உருவெடுக்க...

இன்பமும் துன்பமும் ஒழுக்கத்தின் சன்மானமே,
ஒன்றை அனுபவித்தால் தான் மற்றதன் உண்ணதம் உணர...

ஏற்றத்தாழ்வுதனை புன்னகையுடன் ஏற்றுக்கொள், ஏற்றத்தில் உயரத்தையும் இறக்கத்தில் ஆழத்தையும் அளந்தேன் என பெருமை கொள்...

வாழ்க்கையை புன்னகையால் அளவளாவு,
அழுதவுடன் மறந்து சிரிக்கும் குழந்தைப்போல!!!

-செல்வா


2 comments: