செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Saturday, 6 January 2018

மகிழ்ச்சி தத்துவம்!!!

வாழ்வின் அதீத நேரங்களில் நமது சந்தோஷங்களை பணத்திற்காக துறக்கின்றோம்!

அனுபவிக்காத சின்ன சின்ன சந்தோஷங்களை விலைகொடுத்து,
வாங்கிவிடலாம் எனநினைத்து விடுகின்றோம்!

இந்த உலகமும் அப்படியே வெற்றி பெற்றவனுக்கே மகுடம் சூட்டுகிறது,
வெற்றி பெற்றவனை கேட்டுப்பாருங்கள் அவன் பெற்றதைவிட இழந்ததே அதிகம்!

முடிந்தவரை மிடுக்காய் திரியாமல், கடுக்காய் அளவு மகிழ்ச்சியானாலும் மனம்குளிர மகிழ்வோம்!

சின்ன சின்ன மகிழ்ச்சிகளே நம்வாழ்வின் உயிர்ப்புகள்!
புன்னகைப்போம் புத்துயிர் பெறுவோம்!

-செல்வா

1 comment: