காலத்தின் கொடுமை!!!
காசே எல்லாமாய் ஆன பிறகு உண்பதற்கு சோறு எதற்கு?
கழுவித்தீர்க்க முடியாத பாவமடா!
ஓர் ஓட்டிற்கான பிரதிபலனடா,
ஆட்சியிலிருப்பவருக்கோ அவசரம் அள்ளி குவிப்பதில்!
அப்போது கூச்சலும் கேட்காது குழப்பமும் இராது!
தட்டிக்கேட்பவனை எல்லாம் விலங்கிட்டு அடைத்து தனது விசுவாசத்தை துதிபாடி,
கறையில்லா துணி உடுத்தி பவுசாக உலவுகின்றது அந்த கூட்டம்!
எங்கனம் மன்றாடுவேன் அவ்வப்போது போராடிய என் மக்களுக்கு போராட்டமே வாழ்வான நிலை,
தரிசு நிலத்தை மலடாக்கி, அபாயமான அணுஉலை மேலும் பல கட்டி வாழவைப்போம் பிறரை தலைமகனாய்,
நதிநீர் இணைப்பில்லை, காவிரி நீர் எமக்கில்லை, ஏழை மக்களுக்கு மானியமில்லை, விவசாயிக்கு வாழ்வாதாரமில்லை!
இன்னும் எத்தனையோ மாற்றங்கள் திணிக்கப்படும் வேலையில் குரல் கொடுக்காவிடில் மெல்ல மெல்ல காணாமல் போய்விடும் ஓர் இனம்!
கழுவித்தீர்க்க முடியாத பாவமடா!
ஓர் ஓட்டிற்கான பிரதிபலனடா,
ஆட்சியிலிருப்பவருக்கோ அவசரம் அள்ளி குவிப்பதில்!
அப்போது கூச்சலும் கேட்காது குழப்பமும் இராது!
தட்டிக்கேட்பவனை எல்லாம் விலங்கிட்டு அடைத்து தனது விசுவாசத்தை துதிபாடி,
கறையில்லா துணி உடுத்தி பவுசாக உலவுகின்றது அந்த கூட்டம்!
எங்கனம் மன்றாடுவேன் அவ்வப்போது போராடிய என் மக்களுக்கு போராட்டமே வாழ்வான நிலை,
தரிசு நிலத்தை மலடாக்கி, அபாயமான அணுஉலை மேலும் பல கட்டி வாழவைப்போம் பிறரை தலைமகனாய்,
நதிநீர் இணைப்பில்லை, காவிரி நீர் எமக்கில்லை, ஏழை மக்களுக்கு மானியமில்லை, விவசாயிக்கு வாழ்வாதாரமில்லை!
இன்னும் எத்தனையோ மாற்றங்கள் திணிக்கப்படும் வேலையில் குரல் கொடுக்காவிடில் மெல்ல மெல்ல காணாமல் போய்விடும் ஓர் இனம்!
விழி.எழு.நிமிர்ந்து நில்
-செல்வா

No comments:
Post a Comment