செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Saturday, 6 January 2018

தேநீர்

முதல் நண்பனே!
அனுதினமும் சலிக்காதவனே!
நாளின் தொடக்கமுதல் உறக்கம் வரை என் நினைவை பகிர்பவனே!
உன்னை நான் பருக நான் திளைத்தேன்!
களைப்பினில் உற்சாகம் தர, காலையில் புத்துணர்ச்சி தர,
சிந்தனையில் சித்தம் நிலைத்திர, நித்திரை கொள்ளாத விழி தர,
உன் பங்கு என்னில் அதிகம்!
எவ்வகையான மனதையும் தேற்றுவதாலேயோ என்னவோ தேநீர் ஆனாய்!!!
என்னை உற்சாகம் செய்யும் உன் சௌகரியம் அதிசிறப்பே!!!

-செல்வா



No comments:

Post a Comment