நகரத்து வாழ்க்கை!!!
நகரத்து வாழ்க்கையை நவநாகரிக வாழ்க்கை என்பார் பலர்,
இங்கு வந்தடைபவர்கள் இருவரே,
ஒருவர் கனவுகளையும், மற்றொருவர் கடன்களையும் சுமந்து வருபவர்களே!!!
எல்லாம் இங்கு காசே!!!
காலை முதல் மாலை வரை, மல்லிகை முதல் மனிதம் வரை.
காலை முதல் மாலை வரை, மல்லிகை முதல் மனிதம் வரை.
ஓடு,ஓடு இடைவிடாமல் ஓடு லட்சியம் வேறு வேறாக இருக்கலாம் ஆனால் வழி ஒன்றே!!!
இங்கு காலம் பாராத உழைப்பிற்கே ஊதியம் அதில் பகலுமில்லை, இரவுமில்லை, பனியுமில்லை, மழையுமில்லை,
எந்நிலை உயரும் என்ற நம்பிக்கை மட்டுமே!!!
எந்நிலை உயரும் என்ற நம்பிக்கை மட்டுமே!!!
தன்னை நம்பி! தன் உழைப்பை நம்பி! கனவுகளையும் கடன்களையும் பூர்த்தி செய்ய ஓடுபவர்களை ஒருபோதும் கைவிட்டதில்லை இந்நகரம்!!!
மொத்தத்தில் அனைவரின் கனவுகளினால் தூங்காமல் விழித்திருக்கிறது இந்நகரம் இப்பொழுதும் எப்பொழுதும்!!!
-செல்வா

really nice
ReplyDelete