பரிசு!
எனை முட்டிச்செல்லும் யாவும்
வல்லமை படைத்தவையே!
எனை விட்டுச்செல்லும் யாவும்
தகுதி அற்றவையே!
எனை கடந்து செல்லும் யாவும்
பாடம் கற்றுத்தந்தவையே!
எனை படர்ந்து செல்லும் யாவும்
உணர்வாளன் என உணர்த்தியவையே!
எனை இகழ்ந்து செல்லும் யாவும்
நானாக இருந்ததை காட்டியவையே!
எனை புகழ்ந்து செல்லும் யாவும்
கடமை இருக்கென சொல்லியவையே!
எத்தனே மனிதர் உலகில் அத்தனை புதுமை அதிலில்
ஒன்றாக படைத்திருந்தால்
படைப்பின் அருமை விளங்க
வாய்பில்லை அதனாலே
ஒன்றாய் படைத்து மனதை
பரிசாய் கொடுத்தான்!
பரிசோ நம்கையில்
பயன்பாடும் நம்கையில்!
விழி.எழு.விருட்சமாகுக!
-செல்வா!

அருமை 👍
ReplyDelete