செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Saturday, 15 May 2021

தனித்தன்மை!

தனித்தன்மை!


தனித்திரு தனியாக எழு,

பிறரின் எதிரொலியாகாதே,

உனக்கான குரலாய் நீயே இரு!


பிறரை நகலெடுக்காதே,

தனக்கான சாயலாக நீயே,

வடிவமைத்துக்கொள்வாயாக!


இறைவன் படைப்பில் யாவரும் ஒன்றில்லை,

ஒரே மாதிரி படைக்கப்படவுமில்லை,

ஒவ்வொருவரும் தனித்தன்மையானவர்!

தன்னகத்தை திறமை புதைந்து வைத்திருப்பவர்!

இதை கண்டறிந்தவர் வெல்வார்!


முதலில் நமது திறமையை கண்டறிவோம்,

பின்பு அதனை நன்றாக வளர்ப்போம்!

இறுதிவரை அதன் பலன் நிழல் போல் நமக்குத்தரும்!


விழி.எழு.விருட்சமாகுக!


-செல்வா!



No comments:

Post a Comment