செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Friday, 4 June 2021

பரிசு!

பரிசு!


எனை முட்டிச்செல்லும் யாவும்

வல்லமை படைத்தவையே!

எனை விட்டுச்செல்லும் யாவும்

தகுதி அற்றவையே!


எனை கடந்து செல்லும் யாவும்

பாடம் கற்றுத்தந்தவையே!

எனை படர்ந்து செல்லும் யாவும் 

உணர்வாளன் என உணர்த்தியவையே!



எனை இகழ்ந்து செல்லும் யாவும்

நானாக இருந்ததை காட்டியவையே!

எனை புகழ்ந்து செல்லும் யாவும்

கடமை இருக்கென சொல்லியவையே!


எத்தனே மனிதர் உலகில் அத்தனை புதுமை அதிலில்

ஒன்றாக படைத்திருந்தால் 

படைப்பின் அருமை விளங்க

வாய்பில்லை அதனாலே 

ஒன்றாய் படைத்து மனதை

பரிசாய் கொடுத்தான்!


பரிசோ நம்கையில் 

பயன்பாடும் நம்கையில்!


விழி.எழு.விருட்சமாகுக!


-செல்வா!




1 comment: