செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Monday, 14 June 2021

தமிழ் போல் வாழ்வு!

தமிழ் போல் வாழ்க!


தமிழ் போல் வாழ வரம் வேண்டும்!

ஆண்டு பல நூற்றாண்டு கண்டும்!

தன்னகத்தே அனைத்தையும் கொண்டும்!

மாறுதலுக்கு தகவமைத்துக் கொண்டும்!


செழுமையிலும் வளமையிலும் 

குறைவிலாமல் நிறைவாய்!

எல்லோருக்கும் சான்றாய்

சகிப்பின் ஊன்றாய் நிற்க!


எவர் எதை தேடிப்பயணித்தாலும்

தமிழில் அதற்கான விடை உண்டு!


தமிழ் போல் வாழ்வு கிட்ட 

எவரும் வரம் பெற்று வர வேண்டும்! 


-செல்வா!





No comments:

Post a Comment