செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Thursday, 8 October 2020

நேரம்!

 நேரம்!


இல்லை என்றால் 

என்றுமே இல்லை!

இருக்கிறது என்றால்

அளவிலாமல் இருகிறது!


மனம் என்னும் மாயாவி 

சுகம் என்னும் சூட்சமத்தை

விட முடியாமல் உழல்கிறான்!


நேரத்தை இல்லை என்று மனதை தேற்றாமல்!

நேரம் இருக்கு என்று மனதில்  நினைத்துப்பார்! 


மறைந்திருந்த நேரமெல்லாம்!

மடை திறந்த வெள்ளமாய் வரும்! 


காலம் உன்வசம் கனவும் உன்வசம்

உழைப்பு உன்வசம் வெற்றியும் உன்வசம்!


விழி! எழு! விருட்சமாகுக!


-செல்வா!


1 comment: