சிந்தனை!
சிந்திக்க பழகிடு மனிதா,
சிகரம் பல அடைவாய் நீ மனிதா!
சிந்தனையை அகலமாக்கு மனிதா,
சிறந்த படைப்புகள் நீ படைத்திடுவாய் மனிதா!
சிந்தனையை விரித்திடு மனிதா,
சீரான வாழ்வு வசப்படும் ஓ மனிதா!
சிந்திக்கத் தெரிந்தவனை அடக்கமுடியாது!
சிந்திக்கத் தெரிந்தவனை ஒடுக்க முடியாது!
சிந்தை அது வலிமையான விந்தை,
வாழ்வை மாற்றிடும் அரிய செய்கை!
விழித்திடு, உன் வாழ்வும்
தாழ்வும் உனது கைகளிலே!
-செல்வா!

No comments:
Post a Comment