செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Sunday, 4 October 2020

சிந்தனை!

 சிந்தனை!


சிந்திக்க பழகிடு மனிதா,

சிகரம் பல அடைவாய் நீ மனிதா!


சிந்தனையை அகலமாக்கு மனிதா,

சிறந்த படைப்புகள் நீ படைத்திடுவாய் மனிதா!


சிந்தனையை விரித்திடு மனிதா,

சீரான வாழ்வு வசப்படும் ஓ மனிதா!


சிந்திக்கத் தெரிந்தவனை அடக்கமுடியாது!

சிந்திக்கத் தெரிந்தவனை ஒடுக்க முடியாது!


சிந்தை அது வலிமையான விந்தை,

வாழ்வை மாற்றிடும் அரிய செய்கை!


விழித்திடு, உன் வாழ்வும் 

தாழ்வும் உனது கைகளிலே!


-செல்வா!




No comments:

Post a Comment