செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Monday, 27 July 2020

அம்மா!

அம்மா!
அழகான ஓவியம் நீ!
எத்தனை கவிதைகள் 
வரைந்தாலும் போதாது 
அம்மா உன் பெருமைக்கு 
அது ஈடாகாது இணையாகாது!

எனை சுமந்த உனக்கு 
மறுகை என்ன செய்வேன்
எத்தனை செய்தாலும்
சிறு கையில் ஊட்டிய
கூழ் போல சிறியனவே!

எத்தனை பிறவி எடுத்தாலும் 
உன் மடியில் நான் தவழ்ந்திட 
வரம் தருவாய்  நீ எனக்கு
தாயே அச்சொல்லின்
பொருள் உணர்ந்தேன் 
உன் செழுத்த அன்பிலே!
தேர்ந்த நற்பண்பிலே!

உன் போல் யாராலும் 
தர இயலாது அவ்வன்பு
என்றும் மாறாத அன்பு! 

வாழி நீர் வாழி...

-செல்வா!





























































































































No comments:

Post a Comment