செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Wednesday, 1 July 2020

மழை முகில்

மழை முகில்!

மழையினில் முகம் புதைத்தாய்
முகிலென மனதில் வட்டமடித்தாய்!

எங்கோ உள்ள சந்திரன் இன்று,
என் அறை சன்னல் அருகில் வந்தது,
தூது ஒன்று தந்து சென்றது!

நான் காண மறந்த அந்த எழிலினை!
நான் காண வேண்டி ஒரு கடிதம் தந்தது!

நிலவின் அழகிற்கு நிகரானவளே!
நின் அழகில் இப்புவியும் மறந்து சுழல்கிறது!

நிற்கச்சொல்லி நிதம் வேண்டுகிறேன்!
ஒரு போதும் காதில் விழவில்லை ஏனோ!

-செல்வா!

No comments:

Post a Comment