மழை முகில்!
மழையினில் முகம் புதைத்தாய்
முகிலென மனதில் வட்டமடித்தாய்!
எங்கோ உள்ள சந்திரன் இன்று,
என் அறை சன்னல் அருகில் வந்தது,
தூது ஒன்று தந்து சென்றது!
நான் காண மறந்த அந்த எழிலினை!
நான் காண வேண்டி ஒரு கடிதம் தந்தது!
நிலவின் அழகிற்கு நிகரானவளே!
நின் அழகில் இப்புவியும் மறந்து சுழல்கிறது!
நிற்கச்சொல்லி நிதம் வேண்டுகிறேன்!
ஒரு போதும் காதில் விழவில்லை ஏனோ!

No comments:
Post a Comment