செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Monday, 13 July 2020

பஞ்சம்!

பஞ்சம்!

கவிஞனுக்கு உவமை பஞ்சமில்லை!
குழந்தைக்கு தூக்கம் பஞ்சமில்லை!

நிலவுக்கு வானம் பஞ்சமில்லை!
மழைக்கு நிலம் பஞ்சமில்லை!

எனக்கு மட்டும் நினைவுப்பஞ்சம்!
கொஞ்சம் நஞ்சம் இல்லா அதீதபஞ்சம்!

தீயாய் பரவும் பசியாய்!
ஆறாய் விரியும் நீர் திமிலாய்!

நீளும் உந்தன் நினைவுப்பஞ்சம்! 
தாளாதோ இப்பஞ்சம் காணாத நாள் வரை!

-செல்வா!


No comments:

Post a Comment