பஞ்சம்!
கவிஞனுக்கு உவமை பஞ்சமில்லை!
குழந்தைக்கு தூக்கம் பஞ்சமில்லை!
நிலவுக்கு வானம் பஞ்சமில்லை!
மழைக்கு நிலம் பஞ்சமில்லை!
எனக்கு மட்டும் நினைவுப்பஞ்சம்!
கொஞ்சம் நஞ்சம் இல்லா அதீதபஞ்சம்!
தீயாய் பரவும் பசியாய்!
ஆறாய் விரியும் நீர் திமிலாய்!
நீளும் உந்தன் நினைவுப்பஞ்சம்!
தாளாதோ இப்பஞ்சம் காணாத நாள் வரை!
-செல்வா!

No comments:
Post a Comment