செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Wednesday, 1 July 2020

வாராயோ தோழா!

வாராயோ தோழா!

வாசல் வரை வந்து நின்றேன்
நீ வருவதாக தெரியவில்லை!

வீதி எங்கும் தேடி அலைந்தேன்
நீ வருவதாக தெரியவில்லை!

ஊர் எங்கும் தேடித்திரிந்தேன்
நீ இருப்பதாக தெரியவில்லை!

சன்னல் ஓரம் தயங்கி நிற்கிறேன்
சாலையில் கடந்து செல்லும் 
வாகனத்தில் எதாவது ஒன்றில் 
உன்னை கண்டடைவேன் என!

வாராயோ தோழா வாராயோ!

-செல்வா!

No comments:

Post a Comment