வாராயோ தோழா!
வாசல் வரை வந்து நின்றேன்
நீ வருவதாக தெரியவில்லை!
வீதி எங்கும் தேடி அலைந்தேன்
நீ வருவதாக தெரியவில்லை!
ஊர் எங்கும் தேடித்திரிந்தேன்
நீ இருப்பதாக தெரியவில்லை!
சன்னல் ஓரம் தயங்கி நிற்கிறேன்
சாலையில் கடந்து செல்லும்
வாகனத்தில் எதாவது ஒன்றில்
உன்னை கண்டடைவேன் என!
வாராயோ தோழா வாராயோ!
No comments:
Post a Comment