இயற்கை எழினி!
தூரத்து நிலவும் பக்கம் தெரிகிறது!
என் பாரமெல்லாம் பஞ்சாய் மாறுகிறது!
வானத்து தேவதையே,
முகில் என்ன உன் உறவோ,
மின்னல் என்ன உன் தூதரோ,
இடி என்ன உன் தோழியோ,
தூரல் என்ன உன் கோபமோ!
ஏதேதோ வந்து செல்கிறது,
உனது வருகையை சொல்ல!
எதேதோ நின்று செல்கிறது,
உனது அருகாமையை சொல்ல!
கனவுலக ராணியே!
நினைவுலக தேனீயே!
பாதை மறவாதே!
-செல்வா!

No comments:
Post a Comment