செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Tuesday, 14 July 2020

இயற்கை எழினி!

இயற்கை எழினி!

தூரத்து நிலவும் பக்கம் தெரிகிறது!
என் பாரமெல்லாம் பஞ்சாய் மாறுகிறது!

வானத்து தேவதையே,
முகில் என்ன உன் உறவோ,
மின்னல் என்ன உன் தூதரோ,
இடி என்ன உன்  தோழியோ,
தூரல் என்ன உன் கோபமோ!

ஏதேதோ வந்து செல்கிறது,
உனது வருகையை சொல்ல!
எதேதோ நின்று செல்கிறது,
உனது அருகாமையை சொல்ல!

கனவுலக ராணியே!
நினைவுலக தேனீயே!
பாதை மறவாதே!

-செல்வா!

No comments:

Post a Comment