முயல்!
பனி படர்ந்த சாலை ஓரம்,
வழிகாட்டும் தளிர் மலரே! 
தளர்வரியாத உன் முகம் 
காண ஓடிவரும் வண்டு நான்!
மணம் கமழ்ந்து நீ வீற்றிருக்க,
மதி மயங்காமல் என்னவாகும்!
மலை அழகோ மதி அழகோ 
மனம் வியக்கும் நீ அழகோ!
அயல் அல்லாத கயல் நீ,
புயல் அல்லாத அலை நீ,
மயல் அல்லாத இயல் நீ,
பயல் அல்லாத முயல் நீ!
நானோ முயன்றேன்,
நானே முயல்கின்றேன்!
அடையாமல் தீராது இந்த 
முயல் ஆமை பந்தயம்!
-செல்வா!
#முயல் #தமிழ்கவிதை #கவிதை #இன்பம் #குழந்தை #இனியதமிழ்செல்வா 
#Kavidai #iniyatamilselva #child #alwayshappy #Behappt
.png) 
 
 
 
 
 
 
 

அருமை
ReplyDelete