எனது இந்தியா!
எனது இந்தியா நான் கண்ட கனவிலே நிற்கிறது!
எனது இந்தியா நான் படித்த புத்தகத்திலே தங்கியது!
தேங்கிக்கிடக்கும் வேற்றுமைகள் களையப்படுவது எப்போது?
சிதறிக்கிடக்கும் ஒற்றுமைகள் சேர்வது எப்போது?
புதிய இந்தியா அவ்வப்போது பிறந்ததாக அறிந்தேன்!
ஆனால் ஒரு போதும் அது வளர்ந்ததாக அறியவில்லை!
நாம் படித்த வேற்றுமையில் ஒற்றுமை என்று நிறைவேறும்?
நாம் நேசிக்கும் வேற்றுமையில் ஒற்றுமை என்று நிறைவேறும்!
பல பல தலைவர்கள் கண்ட கனவும்,
பல பல இளைஞர்கள் உழைப்பும் ஒருசேரவும்!
தன்னிறைவான தேசம் தன்னிலே மலரட்டும்!
இந்த சுதந்திர திருநாளில் மலரட்டும் நல்இந்தியா!
வாழ்க பாரதம்.வளர்க பாரதம்!
-செல்வா!

No comments:
Post a Comment