விழுவதும் எழுவதும் வாழ்வின் பரிணாமமே,
பகல் முடிந்து இரவைப் போல...
பகல் முடிந்து இரவைப் போல...
கடிவதும் கட்டி அணைப்பதும் அன்பின் குணமே,
நல்மனிதனாய் உலகத்தில் உருவெடுக்க...
நல்மனிதனாய் உலகத்தில் உருவெடுக்க...
இன்பமும் துன்பமும் ஒழுக்கத்தின் சன்மானமே,
ஒன்றை அனுபவித்தால் தான் மற்றதன் உண்ணதம் உணர...
ஒன்றை அனுபவித்தால் தான் மற்றதன் உண்ணதம் உணர...
ஏற்றத்தாழ்வுதனை புன்னகையுடன் ஏற்றுக்கொள், ஏற்றத்தில் உயரத்தையும் இறக்கத்தில் ஆழத்தையும் அளந்தேன் என பெருமை கொள்...
வாழ்க்கையை புன்னகையால் அளவளாவு,
அழுதவுடன் மறந்து சிரிக்கும் குழந்தைப்போல!!!
அழுதவுடன் மறந்து சிரிக்கும் குழந்தைப்போல!!!
-செல்வா







