அம்மா!
அழகான ஓவியம் நீ!
எத்தனை கவிதைகள்
வரைந்தாலும் போதாது
அம்மா உன் பெருமைக்கு
அது ஈடாகாது இணையாகாது!
எனை சுமந்த உனக்கு
மறுகை என்ன செய்வேன்
எத்தனை செய்தாலும்
சிறு கையில் ஊட்டிய
கூழ் போல சிறியனவே!
எத்தனை பிறவி எடுத்தாலும்
உன் மடியில் நான் தவழ்ந்திட
வரம் தருவாய் நீ எனக்கு
தாயே அச்சொல்லின்
பொருள் உணர்ந்தேன்
உன் செழுத்த அன்பிலே!
தேர்ந்த நற்பண்பிலே!
உன் போல் யாராலும்
தர இயலாது அவ்வன்பு
என்றும் மாறாத அன்பு!
வாழி நீர் வாழி...





