செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Wednesday, 24 June 2020

தீர்வு!

தீர்வு!

வலிமிகு காலங்களில் கூட வழி உண்டு!
இரு விழி உடன் நேர்க்கொண்டு நோக்க!

புலி மிகு காட்டில் கூட புகலிடம் உண்டு!
புத்தி கொண்டு தெளிவாய் நோக்க!

அல்லதை நாளும் மனதில் வளர்ப்பவன்,
ஊடு பயிர் போல் காற்றடிக்க சாய்ந்திடுவான்!

நல்லதை நாளும் மனதில் வளர்ப்பவன்,
நெடு மரம் போல் காற்றடிக்க நிலைத்திடுவான்!

நம் கையில் இருப்பது மூலதனம்,
நல்ல வித்து வளர்ந்து நன்மரமாகும்,
நல்லெண்ணம் நல்ல வெற்றியாகும்! 

கனவு கலைவதும் விளைவதும் நம் கையிலே!

விழி.எழு.விருட்சமாகுக!

-செல்வா!

Attachments area

3 comments: