செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Monday, 22 June 2020

சிக்கல்!

சிக்கல்!

சிக்கலுக்கு மத்தியில்,
சிக்கித் தவிக்கும் இளைஞா!
நல்சிந்தனை  ஒன்றை போதும்,
நிந்தனை செய்து வைத்துக்கொள்!

சித்தம் தெளிவாய் இருக்க,
சிறப்புக்கும் சிறப்பு சேரும்!
சித்தம் குழப்பமாய் இருக்க,
சிறுகல்லும் கால் தடுக்கும்! 

சிக்கல்கள் பல பல வந்தாலும் 
சிலந்தியாய் நீ மாறிடுவாய்!
தடங்கல் பல பல வந்தாலும்
மைல் கல்லாய் நீ மாற்றிடுவாய்!

மாற்றம் ஒன்றே மாறாதது இவ்வுலகில்!
நல்மாற்றம் நற்சிந்தனையிலே ஆரம்பம்!

எண்ணங்களை மாற்றுவோம்,
நல்ல எதிர்காலம் ஆக்குவோம்!

விழி.எழு.விருட்சமாகுக!

-செல்வா!




No comments:

Post a Comment