செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Sunday, 14 June 2020

காற்றாடி!

காற்றாடி!

என் ஆசைகளை காற்றில் பறக்கவிட்டேன்!
என்றாவது ஓர் நாள் என்னை வந்தடையும் என!

என் கனவுகளை காற்றில் பறக்கவிட்டேன்!
என்றாவது ஓர் நாள் எனது கைகூடும் என!

என் சுவாசத்தை காற்றில் பறக்க விட்டேன்!
என்றாவது நறுமணம் வீசும் என! 

என் கோபத்தை காற்றில் பறக்க விட்டேன்!
என்றாவது நடுத்தர வாழ்வு மாறும் என!

இனி எதை காற்றில் பறக்க விட,
நான் நானாக உணர்வேன்?

தேடியே தொலைகிறேன்,
தேடலில் தொலைகிறேன்!

-செல்வா!

No comments:

Post a Comment