காற்றாடி!
என் ஆசைகளை காற்றில் பறக்கவிட்டேன்!
என்றாவது ஓர் நாள் என்னை வந்தடையும் என!
என் கனவுகளை காற்றில் பறக்கவிட்டேன்!
என்றாவது ஓர் நாள் எனது கைகூடும் என!
என் சுவாசத்தை காற்றில் பறக்க விட்டேன்!
என்றாவது நறுமணம் வீசும் என!
என் கோபத்தை காற்றில் பறக்க விட்டேன்!
என்றாவது நடுத்தர வாழ்வு மாறும் என!
இனி எதை காற்றில் பறக்க விட,
நான் நானாக உணர்வேன்?
தேடியே தொலைகிறேன்,
தேடலில் தொலைகிறேன்!

No comments:
Post a Comment