செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Thursday, 28 October 2021

சிரிப்பு!

சிரிப்பு!


சிரித்துப்பழகினால்

வாழ்க்கை எளிதாகுமே!

கடினமோ கவலையோ

இன்னலோ இக்கட்டோ

துன்பமோ துயரமோ

சிரித்திட எல்லாம்

விலகிப்போகும்!

தன்னை மறந்து

தன்னை நினைத்து

தானே சிரிக்க

யாரும் புத்தரே!

நடமாடும் உலகில்

நாகரிகம் என்றென்னி

சிரிக்காமல் ஓடுகின்றனர்

நாளுக்கு ஒருமுறையேனும்

சிரிப்போம் சிந்திப்போம்

வளமுடன் வாழ்வோம்!

-செல்வா


1 comment: