செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Tuesday, 26 October 2021

தேநீர் நண்பனே!

 தேநீர் நண்பனே!


என் உணர்வுகளுக்கு 

மதிப்பளிக்கும் உன்னத

தேநீரே உன்னில் கரையாத

உணர்வுகள் என்னில் இல்லை!


எவ்வுணர்வாயினும்

அதை இரட்டிப்பாக்கவும் 

அரைபாதியாக்கவும்

நீட்டிக்கவும் துண்டிக்கவும்

பலமுறை கைகோர்த்தாய்!


பேசாமலே உன்னால் 

இத்தனை காரியம் 

எவ்வாறு சாதிக்கிறாய்

என்னையும் ஈர்க்கிறாய்!


உன்னோடு கழிந்த 

நொடிகள் மறவாத 

இலக்கணவரிகள்!


தீராத்தாகம் தீர்க்க வா!

பருகி தணிகிறேன்!


-செல்வா!



No comments:

Post a Comment