சிரிப்பு!
சிரித்துப்பழகினால்
வாழ்க்கை எளிதாகுமே!
கடினமோ கவலையோ
இன்னலோ இக்கட்டோ
துன்பமோ துயரமோ
சிரித்திட எல்லாம்
விலகிப்போகும்!
தன்னை மறந்து
தன்னை நினைத்து
தானே சிரிக்க
யாரும் புத்தரே!
நடமாடும் உலகில்
நாகரிகம் என்றென்னி
சிரிக்காமல் ஓடுகின்றனர்
நாளுக்கு ஒருமுறையேனும்
சிரிப்போம் சிந்திப்போம்
வளமுடன் வாழ்வோம்!
-செல்வா

Super
ReplyDelete