கடினம்!
வாழ்வில் கடினமான என
ஒன்று இருந்ததில்லை!
நாம் தயாராக இல்லாத போது
எளிமையானதும் மலைப்பாகிடும்!
வைரத்தினை வைரத்தினால்
வெட்டிட இயலும்,
இமாலய சிகரத்தின் மீது
எறி வென்றிட இயலும்!
கடினமான காலங்கள்
கடந்து போகக்கூடியவையே!
பிறகு அசை போட்டால்
நமக்கே சிரிப்பு வரும்!
கடினம் வரும்
கவனமாய் இரு
கடந்து விடாலாம்
கவலையை விடலாம்!
வாழ்வில் கடினமான
ஒன்று இருந்ததில்லை!
விழி.எழு.விருட்சமாகுக!
-செல்வா!

No comments:
Post a Comment