ஆயத்தம்!
காத்திருந்தேன் என் கனவுகளுக்கு
சிறகு முளைக்கும் வரை!
எதிர்பார்த்திருந்தேன்
என் சிந்தனைகள்
வானத்தை எட்டும் வரை!
யார் என்ன செய்து விட முடியும்!
யார் என்னை வென்று விட முடியும்!
மனது படியாத வரை
முயற்சி முடியாத வரை
இடர் வரினும் தடை வரினும்
தொட்டுவிடாலாம் விட்டுவிடாதே!
வெற்றி நமதே!
விழி.எழு.விருட்சமாகுக!
-செல்வா!

No comments:
Post a Comment