செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Saturday, 18 September 2021

முடிவு!

முடிவு!


இவர் ஒன்று சொல்லுவார் 

அவர் ஒன்று சொல்லுவார் 

முடிவில் திகைப்பவன் நீயே!


தீர்க்கமாக முடிவை எடு

முழு பொறுப்பும் உனதே!

அறிவுரை பற்பல கேள்

முடிவு உனதாக இருக்கட்டும்!


எல்லாவற்றிற்கும் காரணம் உண்டு,

அதை கண்டு அடைவதே காலம்,


இன்றைய நிலையை வைத்து,

நாளைய பொழுதை எடை போடாதே,

இன்று விதைத்தால் நாளை அறுவடை!


பொறுமை, காலம் இவை இரண்டும்,

பதில் உரைக்கும் திடமாக இரு!


-செல்வா!



1 comment:

  1. எண்ணத்தை போலவே முடிவுகள் தென்படும் எத்துணை அறிவுரை கேட்ட பிறகும்.
    நல்ல கவிதை.

    ReplyDelete