முடிவு!
இவர் ஒன்று சொல்லுவார்
அவர் ஒன்று சொல்லுவார்
முடிவில் திகைப்பவன் நீயே!
தீர்க்கமாக முடிவை எடு
முழு பொறுப்பும் உனதே!
அறிவுரை பற்பல கேள்
முடிவு உனதாக இருக்கட்டும்!
எல்லாவற்றிற்கும் காரணம் உண்டு,
அதை கண்டு அடைவதே காலம்,
இன்றைய நிலையை வைத்து,
நாளைய பொழுதை எடை போடாதே,
இன்று விதைத்தால் நாளை அறுவடை!
பொறுமை, காலம் இவை இரண்டும்,
பதில் உரைக்கும் திடமாக இரு!
-செல்வா!

எண்ணத்தை போலவே முடிவுகள் தென்படும் எத்துணை அறிவுரை கேட்ட பிறகும்.
ReplyDeleteநல்ல கவிதை.