செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Thursday, 16 September 2021

பெரியார்!

பெரியார்!


ஒரு கிழம் 

சிலகாலம் முன்பு

சமூகத்தில் மாற்றம்

ஏற்படுத்த முயன்றது!


அன்று தூவிச்சென்ற 

பகுத்தறிவு விதை இன்றோ 

கொழுந்து விட்டு எறிகின்றது!


மனிதனை மனிதன் மதித்து

மனிதம் காப்பதே புனிதம்!


இன்றும் முழுதாய் அடைந்தோமா?

எனினும் எரிகின்ற தனல் விடாது!

என்றாவது ஓர் நாள் அடைந்தே தீரும் இலக்கை! 


-செல்வா!






1 comment: