பயம்!
காத்திரு அது தவம்
தவத்தின் பலன் அதை
காலம் இரட்டிப்பாக்கும்!
பயம் தான் மனிதனை
சங்கிலி போல் கட்டிவிடுகிறது
நம் பயதின் மீது பிறர் ஏறி
நம்மீது சவாரி செய்கின்றனர்!
பயப்படாமல் துணிந்து
மதிகொண்டு செயல்படு
எட்டாத தூரத்தில்
ஏதுவும் இல்லை!
இதுவும் கடந்து போகும்
எதுவும் வந்து சேரும்
காலம் தந்து விடும்
காத்திருத்தல் தவம்
என்ற புரிதல் வரும்!
-செல்வா

நன்றி...
ReplyDelete