செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Tuesday, 20 July 2021

தொடர் ஓட்டம்!

தொடர் ஓட்டம்!


காலங்கள் கடக்கின்றன,

மாயங்கள் நடக்கின்றன!


தொடர் ஓட்டத்தில் 

தொடர்ந்து ஓடினால் 

இலக்கை அடைந்திடலாம்

ஆனால் எத்தனை முறை

தொடர்ந்தோம் கேள்விக்குறி?


சில சமயம் ஏன் ?

பல சமயங்களில்

எல்லையின் தூரம் 

கண்களை அச்சுறுத்தும் 

கால்களை பலவீனமாக்கும்

ஆனால் மனதின் பலத்தால்

சாதித்தவை பல உண்டு!

நம் வாழ்விலும் உண்டு!


நம்பிக்கை வைத்து ஓட,

தூரமும் பாரமும் குறையும்!


காலங்கள் கடந்து செல்ல 

மாயங்கள் நிகழ்ந்து விடும்!


விழி.எழு.விருட்சமாகுக!


-செல்வா 





No comments:

Post a Comment