செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Friday, 2 July 2021

மழலை!

மழலை!


உன் சிரிப்பினில் உலகம் 

தலைகீழாய் தெரிகிறது!

உன் கண்களில் மீண்டும் 

வாழ்வதற்கு ஆசை பிறக்கிறது!


எனை தேற்றும் மழலை மொழி,

எனை ஆற்றும் நிழலை பொழி,

விழிகளில் தெரியும் நளினம்

வழிகள் பல பல தருகிறது

வாழ்வில் புதிய துவக்கம்

அமைத்திடவே!


-செல்வா!




No comments:

Post a Comment