செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Thursday, 8 April 2021

வானமே எல்லை!

வானமே எல்லை!


வானமே எல்லை வாழும் வரை!

வானமே எல்லை வெல்லும் வரை!


விதி கொண்டோர் மட்டும் வென்றதில்லை!

மதி கொண்டோர் எட்டும் வென்றனர்!


நல்ல பழக்கம் வாழ்வை உயர்த்தும்!

நம்பிக்கை வெற்றி ஈட்ட உதவும்!


தண்ணீரில் முதலையின் வெற்றி உறுதி!

தரையில் புலியின் வெற்றி உறுதி!


தனக்கான இடத்தை தெரிவு செய்து கொள்!

தகுதியினை சலிப்பின்றி வளர்த்துக்கொள்!

வானம் என்ன, அண்டம் கூட கையில் எட்டும்!


விட்டுவிடாதே! எட்டும் தொலைவே கனவு!


-செல்வா!






No comments:

Post a Comment