செவிடு!
சிலநேரம் செவிடனாய் இருந்தால் என்ன?
தன்னை பற்றி புறம் பேசுபவர்கள் மத்தியில்?
தன்னை பற்றி புகழ்ந்து பேசுபவர்கள் மத்தியில்!
ஒத்துப்போகாமல் சண்டையிடும் வேளையில்!
குற்றம் கூறி குறை கூறி தட்டிக்கழிக்கும் வேளையில்!
சுற்றம் கூடி தகராறு புரிகையில்!
ஆசைச்சொற்கள் ஆளை விழுங்குகையில்!
அரசியல்வாதி வாக்குறுதி புரிகையில்!
கொஞ்ச நேரம் கேட்காமல் இருந்தால் என்ன?
எத்தனை இடர்களை தள்ளி நிற்கலாம்!
இடரெல்லாம் இடம் போகட்டும்!
நல்வாழ்வு வலம் வரட்டும்!
நல்லது நடக்க நல்லன கேட்டு!
நல்லது நடக்க நல்லன செய்வோம்!
விழித்திருப்போம்!
-செல்வா!

No comments:
Post a Comment