செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Wednesday, 27 January 2021

உழைப்பு!

 உழைப்பு!


உழைப்பு!


நாளை மாற்றத்திற்காக இன்று உழைப்போம்!

நாளை நன்றாக மலர இன்று உழைப்போம்!


சில வேலைகளில் அயர்ந்தாலும்!

சில வேளைகளில் சோர்ந்தாலும்!


தாளாமல் தளராமல் 

உழைப்பால் உயர்வோம்

தன்னிகர் அடைவோம்!


நமக்கான முத்திரையை 

நாமே பதிக்க வேண்டும்!


உயர்ந்தோர் எல்லாம்

ஓர் நாளில் வளரவில்லை!

அதுபோல உழைத்தோர் வீண்போனதாக சரித்திரமில்லை!


உழைப்பால் உலகை வெல்வோம்!

இவ்வுலகமும் காத்திருக்கிறது உனக்காக!


விழி.எழு.விருட்சமாகுக!


-செல்வா!🦋


No comments:

Post a Comment