திருவள்ளுவர்!
நெடுந்தமிழின் பொற்கலைஞனே!
உன் பாக்களால் தமிழெங்கும் பூவாசம்!
கற்போர் கற்கும் விதம்!
காண்போர் வியக்கும் விதம்!
வாழ்வில் பயில்வோர் மகிழும் விதம்!
ஈரடியில் இணையில்லாமல் சொன்னாய்!
கற்றல், கேட்டல், நட்பு, அரண், பகை
உளவு, ஈதல், அறம், பொருள், இன்பம்!
அனைத்தும் அமிழ்தம் போல் தந்தாய்!
நீர் வாழி நின் குறள் வாழி
தமிழ் வாழி வாழ்வாங்கு வாழி!
-செல்வா!

No comments:
Post a Comment