செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Monday, 18 January 2021

திருவள்ளுவர்!

 திருவள்ளுவர்!


நெடுந்தமிழின் பொற்கலைஞனே!

உன் பாக்களால் தமிழெங்கும் பூவாசம்!


கற்போர் கற்கும் விதம்! 

காண்போர் வியக்கும் விதம்!

வாழ்வில் பயில்வோர் மகிழும் விதம்!

ஈரடியில் இணையில்லாமல் சொன்னாய்!


கற்றல், கேட்டல், நட்பு, அரண், பகை

உளவு, ஈதல், அறம், பொருள், இன்பம்!

அனைத்தும் அமிழ்தம் போல் தந்தாய்!


நீர் வாழி நின் குறள் வாழி

தமிழ் வாழி வாழ்வாங்கு வாழி!


-செல்வா!


No comments:

Post a Comment