செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Saturday, 21 November 2020

உயரே பறந்திடு!

 உயரே பறந்திடு! 


ஏறித்தீர இன்னும் எத்தனை படிகள்!

ஏறாமல் தடுக்க எத்தனை தடைகள்!


ஒவ்வொன்றாக ஏறி இலக்கடைய 

எத்தனை சீரிய நோக்கம் வேண்டும்!


ஒவ்வொன்றாக தடைகள் களைய

எத்தனை உறுதியான மனம் வேண்டும்! 


இலக்கு ஒன்றை தீர்மானித்தேன்!

அடையும் வரை உறங்கமாட்டேன்!


விடியும் வரை விண்மீன் தெரியும்!

உறங்கிக்கிடந்தால் எப்படி தெரியும்!


விழி.எழு.விருட்சமாகுக!


-செல்வா!



No comments:

Post a Comment