உயரே பறந்திடு!
ஏறித்தீர இன்னும் எத்தனை படிகள்!
ஏறாமல் தடுக்க எத்தனை தடைகள்!
ஒவ்வொன்றாக ஏறி இலக்கடைய
எத்தனை சீரிய நோக்கம் வேண்டும்!
ஒவ்வொன்றாக தடைகள் களைய
எத்தனை உறுதியான மனம் வேண்டும்!
இலக்கு ஒன்றை தீர்மானித்தேன்!
அடையும் வரை உறங்கமாட்டேன்!
விடியும் வரை விண்மீன் தெரியும்!
உறங்கிக்கிடந்தால் எப்படி தெரியும்!
விழி.எழு.விருட்சமாகுக!
-செல்வா!

No comments:
Post a Comment