செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Sunday, 22 November 2020

பெண்ணே!

 பெண்ணே!


தூரம் உன்னை என்ன செய்யும் பெண்ணே?

துவளாத இரு கால்கள் இருக்கும் வரை! 


பாரம் உன்னை என்ன செய்யும் பெண்ணே?

தாங்கி நிற்க வலுவான தோள் இருக்க!


நேரம் உன்னை என்ன செய்யும் பெண்ணே?

யாருக்கும் பணியாத நேர்மை இருக்க!


வீரம் உரைத்த பல பெண்கள் உண்டு!

வெற்றி படைத்த பல பெண்கள் உண்டு!


வரலாற்றில் உனக்கும் ஓர் இடமுண்டு!

அதை நீயே எழுதிட செயலால் விரைந்திடு! 


-செல்வா!



No comments:

Post a Comment