பெண்ணே!
தூரம் உன்னை என்ன செய்யும் பெண்ணே?
துவளாத இரு கால்கள் இருக்கும் வரை!
பாரம் உன்னை என்ன செய்யும் பெண்ணே?
தாங்கி நிற்க வலுவான தோள் இருக்க!
நேரம் உன்னை என்ன செய்யும் பெண்ணே?
யாருக்கும் பணியாத நேர்மை இருக்க!
வீரம் உரைத்த பல பெண்கள் உண்டு!
வெற்றி படைத்த பல பெண்கள் உண்டு!
வரலாற்றில் உனக்கும் ஓர் இடமுண்டு!
அதை நீயே எழுதிட செயலால் விரைந்திடு!
-செல்வா!

No comments:
Post a Comment