செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Saturday, 29 August 2020

ஏறு முன்னேறு!

 ஏறு முன்னேறு!

 கடந்த காலங்களை நினைவில் கொள்...

 

உனது  விடாமுயறச்சியால் இத்தனை தூரம் நடந்தாய்,

கடந்தாய்நிலைபெற்றாய்!

 

யாரும் உன்னை தடுக்கவில்லை!

எதுவும் உன்னை ஏற்றிவிடவில்லை!

 

உனக்கான நாள் வரும்,

உனதாற்றல் புலப்படும்!

அது வரை பொறுமை கொள்!

 

விழி உள்ளவனுக்கோ ஆயிரம் வழி!

விழி அற்றவனுக்கோ எல்லாம் குழி!

 

வழியும் குழியும் ஒருங்கே வந்தாலும்,

விழித்திருப்பவம் தப்பிவிடுவான்!

 

இனிமேல் எல்லாம் உன்வசம்!

 

விழி.எழு.விருட்சமாகுக!


-செல்வா!




1 comment:

  1. தன்னம்பிக்கையின் உயிர்த்துளி வரிகள்👍🤝

    ReplyDelete