செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Tuesday, 1 September 2020

போர்க்களம்!

 போர்க்களம்!

கொட்டித்தீர்க்க ஒரு கடல் வேண்டும்!
கத்தித்தீர்க்க எதிரொலி இல்லா அறை வேண்டும்!

திட்டித்தீர்க்க எதிரில் சுவர் வேண்டும்!
தட்டித்தீர்க்க இரும்பு மார் வேண்டும்!

மானுடம் மறந்த மனிதர்கள் மத்தியில்,
குறை மட்டுமே நிறைவாய் தெரியும்!
குறை தவிர மற்றவை மறைந்தா போகும்?

மனமே பொறுமை கொள்!
உனக்கான களம் இதுவே!
களமாடி விளையாடு!
உனக்கான களமதை 
நீயே உருவாக்கிடு!

-செல்வா!



No comments:

Post a Comment