செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Tuesday, 7 April 2020

சேவகர்கள்!

சேவகர்கள்!

இடியோ மின்னல் மழையோ
கடுங்குளிரோ சுடும்வெயிலோ
எங்களுக்கு விலக்கில்லை!

பிணியோ தொற்றோ சளியோ
எங்களுக்கு விடுப்பில்லை!

உறவோ நலனோ பற்றோ
எங்களுக்கு மாற்றில்லை!

அதனால் தான் என்னவோ,
எங்கள் பெயர் சேவகர்கள்!

தன்னலம் மறந்து
இம்மாநில மக்களின்,
நன்நலம் போற்றும் நீர் வாழி!

இடைவெளி இன்றி நெருக்கடிகளிலும்
பணியாற்றும் சேவகர்களுக்கு சமர்பணம்!

-செல்வா!

No comments:

Post a Comment