செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Saturday, 4 April 2020

பட்டம்!

பட்டம்!

பட்டம் போல உயர பறக்கனும் எண்ணம்!
விண்ணில் வட்டமிட்டு ஆகாயத்தை தொடனும்!

சிறிய குணத்தோர் தொடா வண்ணம் பறக்கனும்!
பெரிய குணத்தோர் தேடும் வண்ணம் பறக்கனும்!

உலகை ஒரு முறை வட்டமிட்டு வரனும்!
உலகை ஒரு முறை உயரிய எண்ணங்களில் தொடனும்!

எண்ணத்திற்கு வலிமை உண்டு என்பதை!
உயரே பறந்து வட்டமிட்டு உலகிற்கு காட்டனும்!

வானமும் வசப்படும்,
கடலும் அகப்படும்,
புவியும் இசை படும்!
பட்டம் போல உயர்ந்த
எண்ணம் கொண்டால்!

விழி.எழு.விருட்சமாகுக!

-செல்வா!

No comments:

Post a Comment