செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Saturday, 18 April 2020

யதார்த்தம்!

யதார்த்தம்!

காலம் இனிதாகும்
நம் கால்கள் நடக்கும் வரை!

நேரம் இனிதாகும்
நாம் உழைக்கும் வரை!

யோகம் இனிதாகும்
நாம் முயற்சியை விடாத வரை!

சகுனம் இனிதாகும்
சுறுசுறுப்பாய் இருக்கும் வரை!

உண்மை இனிதாகும்
நேர்மையானவர்கள் சொல்லும் வரை!

வாழ்வு இனிதாகும்
பிறருக்கு கொடுக்கும் வரை!

எல்லாம் இனியதாகும்
நம் பார்வை தெளிவாய் இருக்கும் வரை!

கவனமாக பார்ப்போம்,
களிப்புடன் வாழ்வோம்!

-செல்வா


No comments:

Post a Comment