செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Sunday, 5 April 2020

விழிகள்!

விழிகள்!

இறைவன் படைத்த அரிய படைப்பு விழிகள்!
விசும்பிய விழிகளால் உலகம் அச்சமுறும்!

விழி பேசிடாத மொழியில்லை!
அன்பு முதல் கருணை வரை!
கோபம் முதல் தாபம் வரை!
ஆசை முதல் ஓசை வரை!
வலையில்லாமல் சிக்க வைக்கும்
கலை தெரியும் விழிக்கு!


வழி தெரியாதவன்!
விழி யற்றவனாவான்!
விழி திறந்த எல்லோருக்கும்
வழியுண்டு நதி ஓடும் பாதை போலே!

விழி திறக்க, வழி பிறக்கும்!
சாதிக்க பிறந்தோர்க்கு,
சாதனை தூரமில்லை!


-செல்வா!

No comments:

Post a Comment