செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Sunday, 3 March 2019

மனமென்னும் மாயாவி!

மனமென்னும் மாயாவி!

மனமென்னும் மாயாவி
தறிகெட்டு ஓடுதே!
அச்சாணி கழன்ற வண்டியாகி தடம் கெட்டு புரளுதே!

எதை செய்ய வேண்டுமோ,
அதை செய்வதில்லையே,
நேரம் வீணாக்கும் பேதையாய்,
காலம் கடத்தி விரயமாகுதே!

சாதித்தவன் முதலில்
மனதை அடக்கினான்
மமதை அகற்றினான்
பற்றை கொண்டான்
எச்சுகம் இழப்பினும்
இலக்கை தொடவேண்டும்
வெற்றி பெற்றாக வேண்டும்
என்பதை இயல்பாக்கினான்!

வெற்றிக்கு தெரிந்தால் மட்டும் போதுமா?
செயல்படாத இரும்பு துருப்பிடிக்கும்
கட்டுப்படுத்தாத மனது தறிகெடும்
அறிந்து தெரிந்து செயல்படு மனமே!
தாமதம் கொள்ளாதே, காலம் சிறிதே நம்மிடம்!

-செல்வா


1 comment:

  1. அண்ணா உங்கள் மனக்கவிதை அற்புதம் நன்றி கலந்த வணக்கம் அண்ணா தாய் தமிழுக்கும் நன்றி.

    ReplyDelete