யாரை நம்புவது!
கைரேகை பார்த்து பார்த்து
பல ராசிக்கற்கள் அணிந்து
தனம் சேருமா பணம் சேருமா
என தவித்தான் அக்காலத்தில்!
இன்றோ குன்றேரா சாமிகள்,
காட்டை அழித்த பாவிகள்,
கோடியில் புரளும் கேடிகள்,
சில்மிசம் செய்யும் பாதிரிகள்,
எத்தனை ஏமாற்றுக்காரர்கள்?
யாரை நம்புவது என்ற நிலை!
அப்பாவி மனிதன் அல்லாடுகிறான்!
தன்னை சாமி என்கிறான் பாவி!
எதை துறந்தான் துறவியாவதற்கு?
பகுசாய் பங்களா, சொகுசாய் வாகனம்,
சேவைக்கு சேவகர்,ஆசைக்கு சர்வம்,
காசுக்கு தரிசனம்,கார்ப்பரேட் விளம்பரம்,
இத்தனையும் இக்கால (ஆ)சாமிகளிடத்தில் உண்டு!
இதை கண்டு குழம்பாமல் இருப்பவன் வாழ்வு நன்று!
மதம் தலைக்கேறினால் மதயானையின் கதிதான்!
மதம் புனிதமானது இத் தரகர்கள் அபாயமானவர்கள்!
மெய்பக்தி அப்பழுக்கற்றது!
யாருக்கும் தீங்கிழைக்காதது!
வேடம் பூண்ட கயவன் கொடியவனே!
மத போதையில் மனிதம் இழக்காதீர்!
-செல்வா
கைரேகை பார்த்து பார்த்து
பல ராசிக்கற்கள் அணிந்து
தனம் சேருமா பணம் சேருமா
என தவித்தான் அக்காலத்தில்!
இன்றோ குன்றேரா சாமிகள்,
காட்டை அழித்த பாவிகள்,
கோடியில் புரளும் கேடிகள்,
சில்மிசம் செய்யும் பாதிரிகள்,
எத்தனை ஏமாற்றுக்காரர்கள்?
யாரை நம்புவது என்ற நிலை!
அப்பாவி மனிதன் அல்லாடுகிறான்!
தன்னை சாமி என்கிறான் பாவி!
எதை துறந்தான் துறவியாவதற்கு?
பகுசாய் பங்களா, சொகுசாய் வாகனம்,
சேவைக்கு சேவகர்,ஆசைக்கு சர்வம்,
காசுக்கு தரிசனம்,கார்ப்பரேட் விளம்பரம்,
இத்தனையும் இக்கால (ஆ)சாமிகளிடத்தில் உண்டு!
இதை கண்டு குழம்பாமல் இருப்பவன் வாழ்வு நன்று!
மதம் தலைக்கேறினால் மதயானையின் கதிதான்!
மதம் புனிதமானது இத் தரகர்கள் அபாயமானவர்கள்!
மெய்பக்தி அப்பழுக்கற்றது!
யாருக்கும் தீங்கிழைக்காதது!
வேடம் பூண்ட கயவன் கொடியவனே!
மத போதையில் மனிதம் இழக்காதீர்!
-செல்வா

No comments:
Post a Comment