செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Tuesday, 19 March 2019

பொள்ளாச்சி கொடூரம்!

பொள்ளாச்சி கொடூரம்!

தெரியாமல் யாருமில்லை,
உணராமல் தான் உள்ளோம்!

மெத்த படித்து பயன் என்ன?
ஊட்டி வளர்த்து பயன் என்ன?
காம ஆசை தலைவிரித்தாடுது!
காசு பார்க்க கண்டவழி தேடுது!

இங்கு காசு தான் எல்லாம் என சொல்லி வளத்தாச்சு!
தானும் தன்னதும் முக்கியம்னு சொல்லிமுடிச்சாச்சு!
பிறருக்கு வலிச்சா என்ன,
இல்லை பிறர் குடி கெட்டா என்ன?

இன்று நடந்த சம்பவம் பெரும் துயரம்!
இனி இது நடக்காமல் இருக்க உறுதிகொள்க!

பெற்றோர்களே ஆண்பிள்ளையை சொல்லி வளர்க்க!
பெண்பிள்ளையை உரக்க பேசும்படி வளர்க்க!

சமுதாயமே தவறுகளை தட்டிக்கேட்க!
சட்டமே தீங்கானவர்களை சிறையிடுக!

இது நம் அனைவருக்குமான கடமை!
இன்று நமது வீடு தீக்கிறையாகாமல் இருக்கலாம்!
நாளை மாறாவிடில் என்ன நிச்சயம்?

பெண்மையின் பெருமை பேசாது!
பெண்ணை சகமனுசியாய் பார்ப்போம்,
மதிப்போம்! உணர்வோம்!

-செல்வா

No comments:

Post a Comment