செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Friday, 12 April 2019

நிம்மதி!

நிம்மதி!

கஷ்டங்கள் இல்லா வாழ்வில்லை,
எப்போது விடியும் தெரியவில்லை!

உறங்க சென்றால் உறக்கமில்லை!
மனதில் இடிபோல் முழக்கமுள்ளே!

கவனம் மட்டும் சிதறவில்லை!
கலக்கமாய் மனது இருக்குதுள்ளே!

தோல்வியை மட்டும் சந்தித்தவனுக்கு,
தோற்பது ஏமாற்றத்தை தருவதில்லை!
தாமதமான வெற்றியோ ருசிப்பதில்லை!

எப்படித்தான் வாழ வாழ்வை?
எப்படியும் வாழ்வது வாழ்வல்லவே!

மதம் படி வாழவா, 
மனது படி வாழவா! 
இனம் கண்டு வாழவா,
இயல்பு கண்டு வாழவா!
பணம் பார்த்து வாழவா!
பழகிப் பார்த்து வாழவா!

விடை கண்டு விடை கண்டு,
காலங்கள் நிற்காமல் ஓடினாலும்,
நித்தம் நிம்மதி மட்டும் தேடுகிறதே!

எதையும் யோசிக்காதே மனமே!
நீயே உன் நண்பனும் எதிரியும்!
நண்பனுக்கு துணையாயிரு,
நாளும் நன்மையாயிரு,
உனது வெற்றி எனதே!

-செல்வா

No comments:

Post a Comment